சண்டிகர், ஜன.5- ஹரியானா பாஜக அமைச்சர் சந்தீப் சிங், தனது பாலியல் குற் றத்தை மூடிமறைக்க ரூ. 1 கோடி தருவதாகவும், நாட்டை விட்டே ஓடிவிடுமாறும் கூறி மிரட்டுகிறார் என்று வன்கொடுமைக்கு உள் ளான பெண் பயிற்சியாளர் புதிய குற்றச்சாட்டை முன்வைத் துள்ளார். ஹரியானா மாநில விளை யாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இவர் தன்னை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியதாக தேசிய அளவிலான முன்னாள் வீராங்கனையும், தற்போதைய ஜூனியர் தடகள பெண் பயிற்சி யாளருமான ஒருவர் கடந்த ஜன வரி 1-ஆம் தேதி புகார் அளித்தார். இது நாடு தழுவிய விவாதமா னது. அமைச்சருக்கு எதிரான கண் டனங்களையும் குவித்தது. பிரச்சனை முற்றியதால், சந்தீப் சிங் ஜனவரி 2-ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்தார். ஹரியானா காவல்துறை 5 பிரிவுகளின் கீழ் வழங்கு பதிவு செய்தது. ஆனால், அத்துடன் பிரச்சனை முடிந்து விட்டதாக நினைத்ததோ, என் னவோ சந்தீப் சிங் மீது கைது நட வடிக்கை எதையும் எடுக்க வில்லை.
இதுதொடர்பாக பேட்டி யளித்த பெண் பயிற்சியாளரின் வழக்கறிஞர் திபன்ஷு பன்சால், “சந்தீப் சிங் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் 5 பிரிவுகளின் கீழ் அவர் இந்நேரம் கைது செய் யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சண்டிகர் காவல்துறை இந்த விஷயத்தில் இன்னும் தீவி ரமாக செயல்படவில்லை” என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில் 376, 511 ஆகிய பிரிவு களையும் சேர்க்க காவல் துறைக்கு அழுத்தம் கொடுப்ப தாகவும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு செல்வோம் என்றும் கூறிய அவர், காவல்துறையினர் சந்தீப் சிங்கைக் கைது செய்வதற்குப் பதி லாக, அவரது வீட்டிற்கு வெளியே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு கொடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதனிடையே, சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் பிரிவு 164-இன் கீழ் பெண் பயிற்சியாள ரின் வாக்குமூலம் பதிவு செய் யப்பட்டது. அப்போது, பாதிக் கப்பட்ட பெண் பயிற்சியாளர் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ மாக அளித்தார். வழக்கு தொடர் பான ஆவணங்களையும் தனது தொலைபேசியையும் காவல் துறையிடம் அவர் ஒப்படைத்தார்.
“விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் எனக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பினார். எனது தேசிய விளையாட்டுச் சான்றிதழ் நிலு வையில் இருப்பதாகவும், அது தொடர்பாக சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். நானும், என்னி டம் இருந்த சில ஆவணங்களு டன் அமைச்சரைச் சந்திக்க அவ ரது முகாம் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கே சென்றதும் அமைச்சர் என்னிடம் சில்மிஷத் தில் ஈடுபட்டார். என்னை அங்கி ருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். எனது ஆவணங்களை மேஜையில் வைத்துவிட்டு என் காலில் கை வைத்தார். உன்னை முதல்முறையாக பார்த்த போதே எனக்குப் பிடித்து விட்டது என்று பேசிக்கொண்டே இருந்தார். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் உன்னையும் நான் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்று கூறினார். ஆனால் என் மீது வைத்த கையை நான் தட்டி விட்டேன். உடனே அவர் ஆத்திரப்பட்டு என் டீசர்ட்டை கிழித்து விட்டார். நான் அழுது கொண்டே இருந்தேன். உதவி கேட்டு சத்தம் போட்டேன். அமைச் சரின் ஊழியர்கள் அனைவரும் இருந்தும் யாரும் எனக்கு உதவ வில்லை” என்று அந்தப் பெண் பயிற்சியாளர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அமைச்சர் சந்தீப் சிங் தரப்பிலிருந்து ரூ. 1 கோடி தருவதாக பேரம் பேசுவ தாகவும், வெளிநாட்டுக்கு ஓடி விட வேண்டும் என்று மிரட்டல் வரு வதாகவும் பெண் பயிற்சியாளர் புதிய குற்றச்சாட்டை முன்வைத் துள்ளார். இதுதொடர்பாக செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தி ருக்கும் பெண் பயிற்சியாளர், இந்த சம்பவத்தில் முழு விவ ரங்களையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்திருக்கும் நிலை யில், தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு கள் வருகின்றன. நீ எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போய்விடு; மாதம் ஒரு கோடி ரூபாய் தரு கிறோம் என்று மிரட்டல் விடுக்கி றார்கள் என்று தெரிவித்துள்ளார்.